ரஷ்யாவில் நடக்கும் F1 கார்ப் பந்தயத்தில் ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்கள்
ரஷ்யாவில் நடக்கும் F1 கார்ப் பந்தயத்தில் ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்கள்
ரஷ்யாவில் செப்டம்பர் மாதம் நடக்கவிருக்கும் F1 கார் பந்தயத்தில் ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சோச்சி நகரில் உள்ள பந்தயச் சாலையில் பந்தயம் நடக்கிறது.
மார்ச் மாதம் தொடங்கப்பட வேண்டிய F1 கார் பந்தயப் பருவம் கொரோனா கிருமித்தொற்று காரணமாக இம்மாதம் 6-ஆம் தேதி தொடங்கியது.
நோய்ப்பரவல் சூழலில் பந்தயம் நடத்தப்படுவதால் பெரும்பாலான பந்தயங்கள் ரசிகர்கள் யாரும் இல்லாமல் நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் தற்போது ரஷ்யா ரசிகர்களுடன் பந்தயத்தை செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி நடத்துவதாகக் கூறியுள்ளது.
பந்தயத்திற்கான நுழைவுச் சீட்டையும் அது விற்க முடிவெடுத்துள்ளது.
கொரோனா கிருமித்தொற்றால் ஆக மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் ரஷ்யா உலக அளவில் நான்காம் இடத்தில் உள்ளது.
அங்கு 700,000க்கும் அதிகமானோருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது.