Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

AFF Suzuki காற்பந்துக் கிண்ணப் போட்டியை, சிங்கப்பூர் வரும் டிசம்பர் மாதம் ஏற்று நடத்தவுள்ளது

 AFF Suzuki காற்பந்துக் கிண்ணப் போட்டியை, சிங்கப்பூர் வரும் டிசம்பர் மாதம் ஏற்று நடத்தவுள்ளது

வாசிப்புநேரம் -

AFF Suzuki காற்பந்துக் கிண்ணப் போட்டியை, சிங்கப்பூர், வரும் டிசம்பர் மாதம் ஏற்று நடத்தவுள்ளது.

போட்டி, டிசம்பர் 5ஆம் தேதியில் இருந்து ஜனவரி 1ஆம் தேதிவரை நடக்கும்.

அந்தத் தகவலை, சிங்கப்பூர்க் காற்பந்துச் சம்மேளனம், தனது Facebook பக்கத்தில் இன்று வெளியிட்டது.

சிங்கப்பூர், இதற்குமுன் 2014 ஆம் ஆண்டு,
AFF Suzuki காற்பந்துக் கிண்ணப் போட்டியை, வியட்நாமுடன் இணைந்து நடத்தியது.

COVID-19 சூழலில் போட்டி எப்படி நடத்தப்படும் என்பது பற்றிய விவரம் வெளியிடப்படவில்லை.

கடந்த ஆண்டு நடத்தப்பட வேண்டிய AFF Suzuki போட்டி COVID-19 காரணமாக இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டு இப்போது மூன்றாவது முறையாக நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

கடைசியாக 2018ஆம் ஆண்டு நடந்த AFF Suzuki போட்டியில், சிங்கப்பூர் அணி அரையிறுதிக்கு முன்னேறவில்லை.

2012ஆம் ஆண்டு நடந்த AFF Suzuki கிண்ணத்தை சிங்கப்பூர் வென்றது.

-CNA/mt 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்