சுஸுக்கி கிண்ணக் காற்பந்து : முதல் கட்டத்தில் சமநிலை கண்டிருக்கும் மலேசியா, வியட்நாம்
இரண்டாம் கட்ட ஆட்டம், வரும் சனிக்கிழமை ஹனோயில் நடைபெறும்.
சுஸுக்கி கிண்ணக் காற்பந்தின் இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ள மலேசியாவும் வியட்நாமும், முதல் கட்ட ஆட்டத்தில் பொருதின.
இரண்டுக்கு இரண்டு எனும் கோல் கணக்கில், ஆட்டம், சமநிலையில் முடிந்தது. நேற்றைய ஆட்டம் கோலாலம்பூரில் இடம்பெற்றது.
விளையாட்டாளர்களுக்கு உற்சாகமளிக்க மலேசியப் பிரதமர் மஹாதீர் முஹமதும் அவரின் துணைவி சித்தி ஹஸ்மாவும் ஆட்டத்தைக் காணச் சென்றிருந்தனர்.