IPL கிரிக்கெட் தொடரில் முதல்முறையாக சிங்கப்பூர் வீரர்
IPL கிரிக்கெட் தொடரில் முதல்முறையாக சிங்கப்பூர் வீரர்
சிங்கப்பூரைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் டிம் டேவிட் (Tim David) இந்தியாவின் IPL கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ளார்.
உலகப் புகழ் பெற்ற IPL கிரிக்கெட் போட்டியில் கலந்துகொள்ளும் முதல் சிங்கப்பூர் வீரர் அவர்தான்.
25 வயது டிம் டேவிட், பெங்களூர் அணிக்காக விளையாடுகிறார். அந்த அணியை விராட் கோலி வழிநடத்துகிறார்.
அதிரடி ஆட்டத்திற்குப் பெயர்போன டிம் டேவிட் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பாகிஸ்தான் என உலகின் பல T20 கிரிக்கெட் தொடர்களில் விளையாடியுள்ளார்.
சிங்கப்பூருக்காக இதுவரை அவர் 14 T20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் இந்தியாவில் COVID-19 நோய்ப்பரவல் அதிகரித்ததால், அப்போது நடந்து கொண்டிருந்த 14ஆவது IPL கிரிக்கெட் தொடர் பாதியில் நிறுத்தப்பட்டது.
இப்போது தொடரின் மீதமுள்ள போட்டிகள்,
செப்டம்பர் 19 ஆம் தேதி முதல் ஐக்கிய அரபுச் சிற்றரசுகளில் நடக்கவிருக்கின்றன.