தோக்கியோ ஒலிம்பிக் போட்டி - புதிதாக 16 பேருக்கு நோய்த்தொற்று
தோக்கியோ ஒலிம்பிக் போட்டி - புதிதாக 16 பேருக்கு நோய்த்தொற்று
தோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டியில் இன்று புதிதாக 16 பேருக்கு நோய்த்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அந்தத் தகவலை போட்டிகளின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
ஜூலை 1 முதல் உறுதிசெய்யப்பட்டுள்ள, ஒலிம்பிக் போட்டிகள் தொடர்பான COVID-19 நோய்த்தொற்றுச் சம்பவங்களின் மொத்த எண்ணிக்கை 148ஆக உயர்ந்துள்ளது.
தோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கின.
தோக்கியோவில் சமூக அளவில் நோய்த்தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் ஒலிம்பிக் போட்டிகளில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை.
நேற்று தோக்கியோவில் புதிதாக 1,763 பேருக்கு நோய்த்தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
ஒலிம்பிக் போட்டிகள் ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை நடைபெறும்.