Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

தோக்கியோ உடற்குறையுள்ளோர் ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழாவில் ஆப்கானிஸ்தான் கொடி

தோக்கியோ உடற்குறையுள்ளோர் ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழாவின்போது ஆப்கானிஸ்தான் கொடியும் சேர்த்துக் கொள்ளப்படும்.

வாசிப்புநேரம் -

தோக்கியோ உடற்குறையுள்ளோர் ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழாவின்போது ஆப்கானிஸ்தான் கொடியும் சேர்த்துக் கொள்ளப்படும்.

அரசியல் குழப்பம் காரணமாக, போட்டியில் கலந்து கொள்ள இயலாத ஆப்கானிஸ்தான் வீரர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும்வகையில் அவ்வாறு செய்யப்படும்.

ஐக்கிய நாட்டு நிறுவனப் பிரதிநிதி ஆப்கானிஸ்தான் கொடியை ஏந்திச் செல்வார்.

ஜப்பானில் கிருமிப்பரவல் அதிகரித்து வந்தாலும், உடற்குறையுள்ளோர் ஒலிம்பிக் போட்டியைப் பாதுகாப்பாக நடத்த முடியும் என்று ஏற்பாட்டுக் குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

போட்டிகளில் பங்கேற்போர், கிருமிப்பரவல் கட்டுப்பாட்டு விதிகளை மதித்து நடப்பதாக அவர்கள் கூறினர்.

என்றாலும், வீரர்கள் தொடர்ந்து விழிப்புடன் இருக்குமாறு அதிகாரிகள் வலியுறுத்தினர். 

-AP

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்