தோக்கியோ 2020 : ஆண்கள் மூவகைப் போட்டியில் முன்கூட்டியே நீருக்குள் குதித்த வீரர்கள்
தோக்கியோ 2020 : ஆண்கள் மூவகைப் போட்டியில் முன்கூட்டியே நீருக்குள் குதித்த வீரர்கள்
தோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டுகளின் ஆண்கள் மூவகைப் போட்டியின் தொடக்கத்தில் அரிய பிழை நடந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் நேரப்படி இன்று காலை 5.30 மணியளவில், தோக்கியோ பேயில் (Tokyo Bay) 56 வீரர் நீருக்குள் குதிக்கத் தயாராக இருந்தனர்.
அறிவிப்பாளர் "on your marks" என்று சொன்ன போது, மூன்றில் இரு பங்கினர் 1,500 மீட்டர் நீச்சலைத் தொடங்க முன்கூட்டியே குதித்துவிட்டனர்.
அவர்களுக்கு போட்டி இன்னும் ஆரம்பிக்கவில்லை என்பதைத் தெரியபடுத்த படகுகள் அனுப்பப்பட்டன.
கடைசியாக அனைவரும் மீண்டும் தொடக்க நிலைக்குத் திரும்பினர்.
10 நிமிடங்கள் கழித்து, போட்டி பாதுகாப்பாகத் தொடங்கயது.
தோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டிகளை நேரடியாக meWATCH தளத்தின் 14 பிரத்தியேக ஒளிவழிகளில் காணலாம். meWATCH.sg/tokyo2020 என்ற இணையப்பக்கத்தை நாடுங்கள்;
சிங்கப்பூரின் ஒலிம்பிக் கட்டமைப்பான மீடியாகார்ப்புடன் இணைந்திருங்கள்!
-Reuters/kg