COVID-19 : ஒலிம்பிக் சுடர் ஓட்டத்தின்போது கிருமிப் பரவலுக்கு எதிரான நடவடிக்கைகள்
COVID-19 : ஒலிம்பிக் சுடர் ஓட்டத்தின்போது கிருமிப் பரவலுக்கு எதிரான நடவடிக்கைகள்
தோக்கியோ ஆளுநர் யுரிக்கோ கொய்க்கே (Yuriko Koike), ஒலிம்பிக் சுடர் ஓட்டத்தின்போது COVID-19 கிருமிப் பரவலுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ள உறுதியளித்திருக்கிறார்.
ஒலிம்பிக் போட்டிகள் இவ்வாண்டு பாதுகாப்பான முறையில் நடைபெறத் தேவையான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.
கிரீஸ், தனது மண்ணில் நடைபெறவிருந்த ஒலிம்பிக் குழு சுடரோட்டத்தை நேற்று ரத்துசெய்தது.
அதனையடுத்து தோக்கியோ ஆளுநர் அவ்வாறு உறுதிகூறியுள்ளார்.
ஒலிம்பிக் சுடரோட்டம் இம்மாதம் 26 ஆம் தேதி ஃபுக்குஷிமா (Fukushima) மாநிலத்தில் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.