தொடங்கிவிட்டன உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிகள்
ரஷ்யா ஏற்று நடத்தும் உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிகள் அதிகாரத்துவமாகத் தொடக்கம் கண்டுள்ளன.
ரஷ்யா ஏற்று நடத்தும் உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிகள் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கம் கண்டுள்ளன.
முதல் ஆட்டத்தில், ரஷ்யாவும் சவுதி அரேபியாவும் களமிறங்கின.
அதில் ரஷ்யா, ஐந்துக்குப் பூஜ்யம் எனும் கோல் கணக்கில் வெற்றியடைந்தது.
ஆட்டத்தைத் தொடர்ந்து, ரஷ்ய பிரதமர் விளாமடிர் புட்டின் ரஷ்ய அணியின் பயிற்றுவிப்பாளருக்கு வாழ்த்து கூறினார்.
இந்நிலையில், குழு பிரிவு ஆட்டங்கள் சில இன்று நடைபெறவிருக்கின்றன.
இரவு 8 மணிக்கு, எகிப்து, உருகுவே அணிகள் பொருதவிருக்கின்றன.
இரவு 11 மணிக்கு, மொரோக்கோ, ஈரான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நடைபெறும்.