உலக உருட்டுப்பந்துப் பெண்கள் போட்டிகளில் சிங்கப்பூருக்கு முதல் இடம்
சிங்கப்பூர்: உலக உருட்டுப்பந்துப் பெண்கள் போட்டிகளில் சிங்கப்பூர் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.
சிங்கப்பூர்: உலக உருட்டுப்பந்துப் பெண்கள் போட்டிகளில் சிங்கப்பூர் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.
நேற்று (ஆகஸ்ட் 30) நடைபெற்ற போட்டிகளில் சிங்கப்பூரின் ஷெரி டான் (Cherie Tan) கொலம்பியாவைச் சேர்ந்த மரியா ரோட்ரிகேஸை (Maria Rodriguez) 203-201, 258-217 என்ற புள்ளிக் கணக்கில் வென்றார்.
உலக உருட்டுப்பந்துப் பெண்கள் போட்டிகளை வென்ற இரண்டாம் சிங்கப்பூர் வீராங்கனை அவர்.
6 பெண்கள் அடங்கிய குழு சிங்கப்பூரைப் பிரதிநிதித்துப் போட்டிகளில் கலந்துகொண்டது.
ஆகஸ்ட் 22ஆம் தேதி போட்டிகளின் இறுதிச் சுற்று தொடங்கியது.