கியட் ஹோங் சமூக மன்றத்தில் சிறப்பு பட்டிமன்றம்
சிங்கப்பூரில் தமிழ் மொழி மாதத்தை ஒட்டி, சிறப்பு பட்டிமன்றத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சிங்கப்பூரில் தமிழ் மொழி மாதத்தை ஒட்டி, சிறப்பு பட்டிமன்றத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தமிழ் பட்டிமன்றக் கலை கழகமும், கியட் ஹோங் சமூக மன்ற இந்திய நற்பணிக் குழுவும் இணைந்து நிகழ்ச்சியை நடத்தின. நேற்றிரவு கியட் ஹோங் சமூக மன்றத்தில் நிகழ்ச்சி நடைபெற்றது.
கருத்தும், வேடிக்கையும் கலந்த வாதங்களை முன்வைத்தனர், பட்டிமன்றப் பேச்சாளர்கள். நடிகரும், கதாசிரியருமான திரு பாக்யராஜ் பட்டிமன்ற நடுவராக இருந்தார்.
தமிழில் பேச்சாற்றலை வளர்க்க உதவும் இது போன்ற பட்டிமன்றங்களுக்கு மக்கள் தரும் நல்லாதரவு குறித்து மகிழ்ச்சி தெரிவித்தனர் ஏற்பாட்டாளர்கள்.