Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

வாசகர் வட்டத்தின் குறும் பட நிகழ்ச்சி

இவ்வாண்டின் தமிழ் மொழி விழாவையொட்டி, சிங்கப்பூர் வாசகர் வட்டம், புதிய, இளைய குறும்பட இயக்குநர்களை அடையாளம் காணும் முயற்சியில் இறங்கியுள்ளது.

வாசிப்புநேரம் -

இவ்வாண்டின் தமிழ் மொழி விழாவையொட்டி, சிங்கப்பூர் வாசகர் வட்டம், புதிய, இளைய குறும்பட இயக்குநர்களை அடையாளம் காணும் முயற்சியில் இறங்கியுள்ளது.

தொழில்நுட்பம் வளர்ச்சி கண்டுள்ள நிலையில், பலருக்கும் குறும்படம் தயாரிப்பதற்கான ஆர்வம் மிகுந்துள்ளது.

ஆனால், முறையாக அவற்றைத் தயாரிப்பது குறித்த வழிமுறைகளைக் கற்றுக்கொண்டால் கதாபாத்திரங்களையும், காட்சியமைப்பையும் வலுவாக வடிவமைக்க அது உதவும்.

சிங்கப்பூர் இளையர்களுக்கு அந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கம் கொண்ட நிகழ்ச்சி பற்றிப் பகிர்ந்து கொண்டார் ஏற்பாட்டாளர் திருமதி சித்ரா ரமேஷ்.


தங்களது முதல் முயற்சிக்கு நல்ல ஆதரவு கிடைத்திருப்பதாகக் கூறிய ஏற்பாட்டாளர்கள், இனி வரும் ஆண்டுகளிலும் அது தொடரும் என்று நம்பிக்கை தெரிவித்தனர்.

நிகழ்ச்சி, இன்று பிற்பகல் இரண்டரை மணி முதல் மாலை ஐந்தரை மணி வரை, விக்டோரியா சாலையில் உள்ள தேசிய நூலகக் கட்டடத்தின் "பாஸிபிலிட்டி" அறையில் நடைபெறும். 

புக்கிட் பாத்தோக் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் முரளி பிள்ளை சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்கிறார்.

நிகழ்ச்சிக்கு அனுமதி இலவசம். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்