"மானுடம் போற்றும் மாணவர்கள்" - இலக்கியச் சொற்பொழிவு
தமிழ் மிகவும் உணர்ச்சிபூர்வமான மொழி; தமிழைக் கற்றுக்கொள்வதன் மூலம், நற்பண்புகளைப் புரிந்துகொள்ள முடியும் என புக்கிட் பாத்தோக் தனித்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திரு. முரளி பிள்ளை கூறியுள்ளார்.
தமிழ் மிகவும் உணர்ச்சிபூர்வமான மொழி; தமிழைக் கற்றுக்கொள்வதன் மூலம், நற்பண்புகளைப் புரிந்துகொள்ள முடியும் என புக்கிட் பாத்தோக் தனித்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திரு. முரளி பிள்ளை கூறியுள்ளார்.
வீடுகளில் பிள்ளைகள் தமிழை அதிகம் பேச, பெற்றோர் ஊக்குவிக்கவேண்டும்;
தேவையான முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும்;
சமூகத்தினரிடையே சமூகத்தினர் இடையே தமிழ்மொழி குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க, ஆசிரியர்கள் முக்கியப் பங்கு வகிக்கவேண்டும் என்று திரு. முரளி குறிப்பிட்டார்.
தமிழ்மொழி விழாவையொட்டி "மானுடம் போற்றும் மாணவர்கள்" எனும் தலைப்பில் நடத்தப்பட்ட இலக்கியச் சொற்பொழிவு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார் திரு. முரளி.
ஜமால் முகம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் அதற்கு ஏற்பாடு செய்திருந்தது.