சொற்சிலம்பம் 2017: வெற்றிவாகை சூடியது ஆங்கிலோ சீனத் தன்னாட்சிப் பள்ளி
சொற்சிலம்பம் 2017 விருதைத் தட்டிச் சென்றுள்ளது ஆங்கிலோ சீனத் தன்னாட்சிப் பள்ளி.
சொற்சிலம்பம் 2017 விருதைத் தட்டிச் சென்றுள்ளது ஆங்கிலோ சீனத் தன்னாட்சிப் பள்ளி.
மீடியாகார்ப் அரங்கில் சற்று முன் நடைபெற்ற மாபெரும் இறுதிப் போட்டியில் ராபிள்ஸ் கல்வி நிலையத்தை வென்று அது விருதைக் கைப்பற்றியது.
இரு குழுக்களுக்கும் இடையே நடைபெற்ற காரசாரமான விவாதம் பார்வையாளர்களைப் பெரிதும் உற்சாகப்படுத்தியது.
ஏழாவது முறையாக நடந்தேறியது சொற்சிலம்பம்.
தமிழ்மொழி விழாவின் ஓர் அங்கமாக நடத்தப்பட்டுவருகிறது இப்போட்டி.
தொடக்கக் கல்லூரிகள், பலதுறைத் தொழிற்கல்லூரிகள், ஒருங்கிணைக்கப்பட்ட கல்வி நிலையங்கள், IB பாடத்திட்டக் கல்வி நிலையங்கள் ஆகியவை அதில் பங்கேற்கின்றன.
நற்பணிப் பேரவை, வடமேற்கு சமூக மேம்பாட்டுப் பிரிவைச் சேர்ந்த இந்திய நற்பணிச் செயற்குழுக்களுடன் இணைந்து வசந்தம் ஒளிவழியும் போட்டிக்கு ஏற்பாடு செய்தது.
இறுதிப் போட்டியில் பங்கேற்ற குழுக்களைச் சந்தித்துப் பேசினார் எமது நிருபர் பிரசன்னா கிருஷ்ணன்.