தமிழின் தொழில்நுட்ப வளர்ச்சி - ஆராய்கிறது தமிழ் இணைய மாநாடு
தமிழ் மொழி மாதத்தை முன்னிட்டு தமிழ் இணைய மாநாடு இன்று நடைபெறவிருக்கிறது.
தமிழ்மொழி மாதத்தை முன்னிட்டு தமிழ் இணைய மாநாடு இன்று (ஏப்ரல் 8) தேசிய நூலக வாரியக் கட்டடத்தில் நடைபெற்றது.
உத்தமம் எனும் உலகத் தமிழ் தொழில்நுட்ப மன்றம் அதற்கு ஏற்பாடு செய்தது.
தமிழ்மொழி பெற்றுள்ள தொழில்நுட்ப வளர்ச்சியைப் பற்றிய விவரங்களை அளிப்பதே கருத்தரங்கின் நோக்கம் என உத்தமம் அமைப்பின் செயற்குழு உறுப்பினர் திரு எஸ். மணியம் கூறினார்.
தமிழ் தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியைப் பற்றி விரிவாகப் பேசினார் பேராசிரியர் ந. தெய்வசுந்தரம்.
சுமார் 50 பேர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.