பிலிப்பீன்ஸ் ஊழியர்கள் குவைத்துக்குச் செல்ல முழுமையான தடை
பிலிப்பீன்ஸ் ஊழியர்கள் குவெய்த்துக்குச் சென்று பணியாற்ற முழுமையாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதிபர் ரொட்ரீகோ டுட்டார்ட்டே உத்தரவின் பேரில் பிலிப்பீன்ஸ் அந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
பிலிப்பீன்ஸ் ஊழியர்கள் குவைத்துக்குச் சென்று பணியாற்ற முழுமையாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதிபர் ரொட்ரீகோ டுட்டார்ட்டே உத்தரவின் பேரில் பிலிப்பீன்ஸ் அந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
குவைத்தில் உள்ள கைவிடப்பட்ட குடியிருப்பில் இருந்த குளிர்பதனப் பெட்டியில் பிலிப்பீன்ஸைச் சேர்ந்த ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து பிலிப்பீன்ஸ் ஊழியர்கள் குவைத் செல்லத் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டிருந்தது.
தற்போது அது முழுமையான தடையாக மாற்றப்பட்டுள்ளது.
குவைத்தில் - பிலிப்பீன்ஸ் குடிமக்கள் வன்முறைக்கு ஆளாவதும், அவர்களில் சிலர் மாண்டுபோவதும் அண்மையில் வெளிச்சத்துக்கு வந்தது. அதையடுத்து, குவைத்திலுள்ள பிலிப்பீன்ஸ் ஊழியர்கள் நாடு திரும்ப விரும்பினால் இலவச விமானச் சேவைக்கு ஏற்பாடு செய்யப்படும் என்று அதிபர் டுடார்ட்டே கூறினார்.
அடுத்த 72 மணி நேரத்தில் இலவச விமானச் சேவைகளைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்றார் அவர்.