Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

இடுகாட்டில் கழுத்தறுத்துக் கொல்லப்பட்ட நகர மேயர்

பெல்ஜியத்தில் நகரம் ஒன்றின் மேயர் , இடுகாட்டில் கொல்லப்பட்டிருக்கிறார்.71 வயது அல்ஃபிரெட் கடேனின் (Alfred Gadenne) கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் அவரது சடலம் இடுகாட்டில் கிடந்ததை அதிகாரிகள் கண்டனர்.

வாசிப்புநேரம் -

பெல்ஜியத்தில் நகரம் ஒன்றின் மேயர் , இடுகாட்டில் கொல்லப்பட்டிருக்கிறார்.71 வயது அல்ஃபிரெட் கடேனின் (Alfred Gadenne) கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் அவரது சடலம் இடுகாட்டில் கிடந்ததை அதிகாரிகள் கண்டனர்.

Mouscron என்ற தொழிலியல் நகரத்தில் அந்தக் கோரச் சம்பவம் நடந்தது. இடுகாட்டின் பராமரிப்பாளராகவும் அவர் செயல்பட்டு வந்தார்.

ஒவ்வோர் இரவும் இடுகாட்டின் நுழைவாயிலைப் பூட்டுவது அவரது வழக்கமாக இருந்து வந்தது.

சந்தேக நபர் ஒருவர் தானாகவே காவல்துறையினரிடம் சரணடைந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்தன.

சம்பவம் குறித்து பெல்ஜியப் பிரதமர் சார்ல்ஸ் மிச்சல் (Charles Michel) அதிர்ச்சி தெரிவித்தார். மாண்ட திரு கடேனின் குடும்பத்தினருக்கு அவர் தமது அனுதாபங்களைத் தெரிவித்துக் கொண்டார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்