வடகொரியா மீதான புதிய தடைகள்: ஐ.நா பாதுகாப்பு மன்றம்
ஐக்கிய நாட்டுப் பாதுகாப்பு மன்றம், வட கொரியா மீது புதிய வர்த்தக தடைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஐக்கிய நாட்டுப் பாதுகாப்பு மன்றம், வட கொரியா மீது புதிய வர்த்தக தடைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
எண்ணெய் விற்பனையில் கட்டுப்பாடு, ஜவுளி ஏற்றுமதியில் தடை ஆகியவற்றைப் பாதுகாப்பு மன்றம் அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும், வெளிநாடுகளில் பணிபுரியும் வடகொரிய ஊழியர்களுக்கு வேலை அனுமதி வழங்கப்படுவதற்கும் தடை செய்யப்படும்.
பியோங்யாங், ஆறாவது முறையாக அணுவாயுதச் சோதனை மேற்கொண்டதைத் தொடர்ந்து ஐக்கிய நாட்டு அமைப்பு அந்த முடிவை அடுத்துள்ளது.
அமெரிக்கா முன்வைத்த தீர்மானத்தை, பாதுகாப்பு மன்றத்தின் உறுப்பு நாடுகள் அனைத்தும் ஆதரித்தனர்.