Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

ரஷ்யாவின் முன்னாள் ஒற்றரைத் தாக்கப்படுத்தப்பட நச்சு ரசாயணம் உணவகத்தில் கண்டுபிடிப்பு

பிரிட்டனில், முன்னாள் ஒற்றர் ஒருவரைத் தாக்கப் பயன்படுத்தப்பட்ட நச்சு ரசாயனம், அவர் சென்றிருந்த மது கூடத்திலும், உணவகத்திலும் தென்பட்டிருக்கிறது.

வாசிப்புநேரம் -
ரஷ்யாவின் முன்னாள் ஒற்றரைத் தாக்கப்படுத்தப்பட நச்சு ரசாயணம் உணவகத்தில் கண்டுபிடிப்பு

(படம்: AFP/Daniel LEAL-OLIVAS)

பிரிட்டனில், முன்னாள் ஒற்றர் ஒருவரைத் தாக்கப் பயன்படுத்தப்பட்ட நச்சு ரசாயனம், அவர் சென்றிருந்த மது கூடத்திலும், உணவகத்திலும் தென்பட்டிருக்கிறது.

ரஷ்யாவின் முன்னாள் ஒற்றரான திரு சர்கேய் ஸ்கிரிபாலைக் கொலை செய்ய, அந்த நச்சு ரசாயனம் பயன்படுத்தப்பட்டதாகக் நம்பப்படுகிறது.

சாலிஸ்பரி வட்டாரத்தில் உள்ள The Mill மது கூடத்துக்கும், Zizzi உணவகத்துக்கும் சென்ற சுமார் 500 பேர், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத், தங்கள் ஆடைகளையும், உடைமைகளையும் சுத்தம் செய்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

திரு ஸ்கிரிபால் மீதும், அவரது மகள யூலியா மீதும், இம்மாதம் நாலாம் தேதி தாக்குதல் நடத்தப்பட்டது.

அதனை கொலை முயற்சியாகக் கருதி, அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அந்த இருவரும் நாற்காலியில் மயங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்