Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

தேவாலயத்தைத் தாக்கிய மின்னல் - 16 பேர் மரணம்

ருவாண்டாவில் தேவாலயம் ஒன்றை மின்னல் தாக்கியதால் 16 பேர் மாண்டனர். 

வாசிப்புநேரம் -
தேவாலயத்தைத் தாக்கிய மின்னல் - 16 பேர் மரணம்

(படம்: AFP)

ருவாண்டாவில் தேவாலயம் ஒன்றை மின்னல் தாக்கியதால் 16 பேர் மாண்டனர்.

சனிக்கிழமைகளின் போது வழக்கமாக நடைபெறும் கூட்டத்தின் போது சம்பவம் நேர்ந்தது.

மின்னலால் தாக்கப்பட்டதில் பெரும்பாலானோர் உடனடியாக மாண்டனர். இருவர் காயங்களால் மாண்டனர். தேவாலயத்தில் இருந்த மற்ற 140 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

வெள்ளிக்கிழமை ( 9 மார்ச்) அன்று 18 மாணவர்கள் மின்னலால் தாக்கப்பட்டனர். அவர்களில் ஒருவர் மாண்டார்.

இரண்டு வாரங்களுக்கு முன், ருவாண்டாவிலுள்ள 700 தேவாலயங்கள், கட்டட விதிமுறைகளுக்கு உட்பட்டு இல்லையெனக்கூறி மூடப்பட்டன.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்