3.5 மில்லியன் குழந்தை அகதிகள் பள்ளிக்குச் செல்வதில்லை: ஐ. நா.
உலகின் அகதிகள் குழந்தைகளில் பாதிக்கு மேற்பட்ட குழந்தைகள், பள்ளிக்குச் செல்வதில்லை என்று ஐக்கிய நாட்டு நிறுவனம் கூறியுள்ளது.
உலகின் அகதிகள் குழந்தைகளில் பாதிக்கு மேற்பட்ட குழந்தைகள், பள்ளிக்குச் செல்வதில்லை என்று ஐக்கிய நாட்டு நிறுவனம் கூறியுள்ளது.
கடந்த ஆண்டு உலக நிறுவனக் கவனிப்பில் இருந்த ஐந்து வயதுக்கும் 17 வயதுக்கும் இடைப்பட்ட 6.4 மில்லியன் குழந்தைகளில் 3.5 மில்லியன் பேர் பள்ளிக்குச் செல்லவில்லை.
அகதிகளுக்கான ஐக்கிய நாட்டு உயர் ஆணையர் அலுவலகம் அதனைத் தெரிவித்தது.
அவர்களின் கல்விக்குப் பெரிய அளவில் இடைவிடா நிதியுதவி வழங்கப்படவேண்டும் என்று அது வேண்டுகோள் விடுத்துள்ளது.