124 வயதில் தனியே விமானத்தில் பயணம் செய்தவர்
விமானப் பயணம் என்றாலே சிறிய இருக்கையில் பல மணிநேரம் அமர்ந்திருப்பது, விமான நிலையங்களில் வரிசைகளில் கால் கடுக்க நிற்பது, இவை தான் நினைவுக்கு வரும். சில சமயங்களில் பெரிய விமான நிலையங்களில் எங்கு செல்வது என்பது கூட குழப்பமாக இருக்கும்
விமானப் பயணம் என்றாலே சிறிய இருக்கையில் பல மணிநேரம் அமர்ந்திருப்பது, விமான நிலையங்களில் வரிசைகளில் கால் கடுக்க நிற்பது, இவை தான் நினைவுக்கு வரும். சில சமயங்களில் பெரிய விமான நிலையங்களில் எங்கு செல்வது என்பது கூட குழப்பமாக இருக்கும்
இளையர்கள் சிலருக்கே வேதனை தரும் 16 மணிநேர விமானப் பயணத்தை எந்த உதவியும் இன்றி தனியே முடித்தார் 124 வயது சுவாமி சிவானந்த பாபா.
எட்டிஹாட் ஏர்வேஸ் (Etihad Airways) விமானத்தில் கொல்கத்தாவிலிருந்து லண்டனுக்கு அபுதாபி வழியாகப் பயணம் மேற்கொண்டார் அவர்.
முதியவரின் உடல் வலிமையைப் பார்த்து வியந்த விமானச் சிப்பந்திகள் அவருடன் படம் எடுத்துக் கொண்டனர். அதனைத் தம் LinkedIn பக்கத்தில் பதிவேற்றம் செய்தார் விமான நிறுவனத்தின் தலைமை அதிகாரிகளில் ஒருவர்.
சுமார் 21,000 'likes' எனும் விருப்பக் குறியீடுகளைப் பெற்றுள்ளது பதிவு.
1896இல் பிறந்த சுவாமி சிவானந்த பாபா இந்தியாவில் சமய போதகராக உள்ளார். கட்டுப்படியான, எளிமையான வாழ்க்கைமுறைக்குப் புகழ் பெற்றவர் அவர்.