23 ரஷ்ய தூதர்களை வெளியேற்றியது பிரிட்டன்
முன்னைய உளவாளி ஒருவருக்கும் அவரது மகளுக்கும் நஞ்சூட்டப்பட்டது தொடர்பில் பிரிட்டன் 23 ரஷ்ய தூதர்களை வெளியேற்றியுள்ளது.
முன்னைய உளவாளி ஒருவருக்கும் அவரது மகளுக்கும் நஞ்சூட்டப்பட்டது தொடர்பில் பிரிட்டன் 23 ரஷ்ய தூதர்களை வெளியேற்றியுள்ளது.
66 வயது ஷ்ரிபாலும் அவரது மகள் 33 வயது யூலியாவும் இம்மாதம் 4 ஆம் தேதி இங்கிலாந்திலுள்ள சேலிஸ்பரி நகரில் சுயநினைவின்றிக் கிடந்தவாறு காணப்பட்டனர். தற்போது மருத்துவமனையில் இருக்கும் அவர்கள் இருவரும் கவலைக்கிடமாக உள்ளனர்.
அவ்விருவர் மீதான கொலை முயற்சிக்கு ரஷ்யா பொறுப்பு என்பதை பிரிட்டிஷ் பிரதமர் தெரேசா மே கூறினார்.