Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

சிறையிலிருந்து தப்பிக்க முயன்ற 17 கைதிகள் பலி

தென் மேற்கு பசிபிக் நாடான பப்புவா நியூ கினியில் சிறைக் கைதிகள் 17 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். 

வாசிப்புநேரம் -
சிறையிலிருந்து தப்பிக்க முயன்ற 17 கைதிகள் பலி

பப்புவா நியூ கினி காவல்துறை அதிகாரிகள் (படம்: PNGFM News / via REUTERS)

லே, பப்புவா நியூ கினி : தென் மேற்கு பசிபிக் நாடான பப்புவா நியூ கினியில் சிறைக் கைதிகள் 17 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

கைதிகள் சிறையை உடைத்துத் தப்பிக்க முயன்றபோது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

தப்பிச் சென்ற கைதிகளில் மூவர் மீண்டும் கைது செய்யப்பட்டனர்.

மேலும் 57 பேரைக் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

பப்புவா நியூ கினியில் இரண்டாவது பெரிய நகரம் லே. அங்குள்ள புய்மோ சிறையில் உள்ள கைதிகள் சிறை வளாகத்தை உடைத்து தப்பிக்க முயன்றனர்.

அப்போது சிறைக்காவலர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

கடந்த ஆண்டும் இதே சிறையிலிருந்து கைதிகள் தப்பிக்க முயன்றபோது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

அப்போது 12 பேர் கொல்லப்பட்டனர்.

தப்பிச் சென்ற கைதிகளுக்கு அவர்களின் உறவினர்களோ, நண்பர்களோ அடைக்கலம் கொடுக்கக்கூடாது என்று காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்