ஆஸ்திரேலியாவில் நெகிழ வைக்கும் ஒரு தந்தையின் பாசம்
ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் நெடுஞ்சாலை. அதைத் தாண்டியபிறகு தனது காரில் 30 மணிநேரத்துக்குமேல் அடைபட்டிருந்தார் ஒரு பதின்மவயது ஆடவர்.
ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் நெடுஞ்சாலை. அதைத் தாண்டியபிறகு தனது காரில் 30 மணிநேரத்துக்குமேல் அடைபட்டிருந்தார் ஒரு பதின்மவயது ஆடவர்.
17 வயது சாமுவேல் லெத்பிரிட்ஜைக் காணாமல் அவரது தந்தை தேடி அலைந்தார். சென்று சேரவேண்டிய நண்பனின் வீட்டுக்கும் மகன் செல்லவில்லை. கவலையடைந்த அவரது குடும்பத்தினர் காவல்துறை அதிகாரிகளைத் தொடர்புகொண்டனர். தந்தையின் உள்மனம் மட்டும் மகன் கிடைத்துவிடுவான் என்றே சொல்லிக் கொண்டிருந்தது.
சுமார் ஐந்தாண்டுகளுக்குமுன் நடந்த ஒரு கார் விபத்தை நினைவுகூர்ந்தார். அதில் காணாமல்போன ஓர் ஆடவர் ஐந்து நாட்களாகியும் திரும்பாததால் அவர் இறந்துவிட்டதாக முடிவுசெய்தனர். அதுபோல் தனது மகனுக்கு நடக்கவிடப் போவதில்லை என்பதில் தந்தை உறுதியாய் இருந்தார்.
மகன் ஏதோ பிரச்சினையில் சிக்கியிருக்கக்கூடும் என்று நினைத்தார். ஹெலிகாப்டர் ஒன்றை வாடகைக்கு எடுத்தார். தேடத் தொடங்கினார். பத்தே நிமிடத்தில் மகனைக் கண்டுபிடித்துவிட்டார்!