Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

'சிரி'யால் வாழ்க்கையில் மீண்டும் சிரித்தவர்

வீட்டில் ஏற்பட்ட வெடிப்பில் காயமுற்ற ஆடவர் ஒருவர் தன் வாழ்க்கையைக் காப்பாற்றியதற்காக கைத்தொலைபேசிச் சேவையான 'சிரி'க்கு (Siri) நன்றி கூறியிருக்கிறார்.

வாசிப்புநேரம் -

வில்மொட்(நியூ ஹேம்ப்ஷயர்): வீட்டில் ஏற்பட்ட வெடிப்பில் காயமுற்ற ஆடவர் ஒருவர் தன் வாழ்க்கையைக் காப்பாற்றியதற்காக கைத்தொலைபேசிச் சேவையான 'சிரி'க்கு (Siri) நன்றி கூறியிருக்கிறார்.

காலியாக இருந்த தன் தாயாரின் வீட்டில் சந்தேகத்துக்குரிய வகையில் ஏதோ இருப்பதை உணர்ந்த கிறிஸ்தஃபர் பியுச்சர் வீட்டுக்குள் சென்று பார்த்தார்.

வீட்டுக்குள் நுழைந்து ஒரு விளக்கைத் தட்டியதும் வீடு வெடித்ததாக அவர் கூறினார்.

வீடு முழுவதும் தீப்பற்றிக் கொண்டதாகவும் வீட்டின் பாதிப்பகுதி பியுச்சர் உள்ளே இருந்தபோதே எரிந்ததாகவும் அவர் சொன்னார்.

பியுச்சரின் முகத்திலும் கைகளிலும் கடுமையான தீக்காயங்கள்.

கைத்தொலைபேசியை எடுத்து யாரையும் தொடர்பு கொள்ளக்கூட அவரால் முடியவில்லை.

ஐஃபோனின் குரல் கட்டுப்பாட்டு மெய்நிகர்ச் சேவையான 'சிரி' மூலம் 911ஐத் தொடர்புகொண்டார்.

பியுச்சர் தற்போது தீக்காயங்களுக்காகச் சிகிச்சை பெற்று வருகிறார்.

முழுமையாகக் குணமடைந்ததும் வேலைக்குத் திரும்ப முடியும் என நம்பிக்கை கொண்டுள்ளார் அந்தச் சமையல் நிபுணர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்