வடக்கு ஐரோப்பாவின் வீசிய புயலில் 9 பேர் பலி
வடக்கு ஐரோப்பாவின் வீசிய புயலில் சிக்கி 9 பேர் மாண்டனர். அவர்களில் இருவர் தீயணைப்பாளர்கள்.
வடக்கு ஐரோப்பாவின் வீசிய புயலில் சிக்கி 9 பேர் மாண்டனர். அவர்களில் இருவர் தீயணைப்பாளர்கள்.
ஜெர்மனியில் மணிக்கு 203 கிலோமீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசியது. பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன.
ஜெர்மனியில் 6 பேர். நெதர்லந்தில் இருவர். பெல்ஜியத்தில் ஒருவர் என மொத்தம் ஒன்பது பேர் உயிரிழந்தனர்.
2007 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஜெர்மனியைத் தாக்கியுள்ள கடுமையான புயல் இது என்று அந்நாட்டு வானிலை ஆய்வகம் தெரிவித்துள்ளது.
கடுமையான காற்றின் காரமணாக சில நகரங்களில் ரயில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.