Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

சக மாணவர்களைக் கோடரியால் தாக்கி, பள்ளிக்குத் தீ மூட்டிய ரஷ்ய இளையர்

பள்ளியில் சக மாணவர்கள் 6 பேரைக் கோடரியால் தாக்கிக் காயப்படுத்தியதோடு, பள்ளிக்குத் தீ மூட்டினார் ரஷ்ய இளையர் ஒருவர்.

வாசிப்புநேரம் -

மாஸ்கோ: பள்ளியில் சக மாணவர்கள் 6 பேரைக் கோடரியால் தாக்கிக் காயப்படுத்தியதோடு, பள்ளிக்குத் தீ மூட்டினார் ரஷ்ய இளையர் ஒருவர்.

சைபீரியாவின் உலான்-உடேயின் புறநகர் பகுதியில் உள்ள பள்ளியில் உயர்நிலை 3 வகுப்பில் பயின்று வந்த மாணவன், உயர்நிலை முதல் வகுப்பு மாணவர்களைக் கோடரியால் தாக்கினார்.

அதன் பின் அவர்கள் இருந்த வகுப்பறைக்குத் தீ மூட்டினார்.

அதில் ஐந்து மாணவர்களும் ஆசிரியர் ஒருவரும் காயமடைந்தனர்.

தற்கொலைக்கு முயன்ற தாக்குதல்காரர், தடுத்து வைக்கப்பட்டுத் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்