Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

செய்யாத கொலைகளுக்கு 23 ஆண்டு சிறையில் அடைக்கப்பட்ட ஆடவருக்கு 1.5 மில்லியன் டாலர் இழப்பீடு

செய்யாத கொலைகளுக்கு 23 ஆண்டு சிறையில் அடைக்கப்பட்ட ஆடவருக்கு 1.5 மில்லியன் டாலர் இழப்பீடு

வாசிப்புநேரம் -
செய்யாத கொலைகளுக்கு 23 ஆண்டு சிறையில் அடைக்கப்பட்ட ஆடவருக்கு 1.5 மில்லியன் டாலர் இழப்பீடு

படம்: Channel NewsAsia

அமெரிக்காவின் கன்ஸாஸ் மாநிலத்தில், செய்யாத கொலைகளுக்கு 23 ஆண்டு சிறையில் இருந்த ஆடவருக்கு 1.5 மில்லியன் டாலர் இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது.

1994இல் இரு கொலைக் குற்றச்சாட்டுகளின் தொடர்பில் 17 வயது லமோண்ட் மெக்கிண்டையருக்குச் (Lamonte McIntyre) சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

தவறுதலாகச் சிறைக்கு அனுப்பப்பட்டது தெரியவந்த பிறகு 2017இல் அவர் விடுவிக்கப்பட்டார்.

தவறுதலாக சிறைக்கு அனுப்பட்டதற்காக நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார் மெக்கிண்டாயர்.

சிறையில் கழித்த 23 ஆண்டுகளை மாநில அரசாங்கத்தால் தமக்குத் திருப்பித் தரமுடியாதே என்று அவர் நீதிமன்றத்தில் வாதிட்டார்.

1.5 மில்லியன் டாலர் இழப்பீட்டுடன் ஈராண்டுக்கான சுகாதாரச் சலுகைகளையும் பெற்றார் ஆடவர். உயர் கல்வியைத் தொடர்வதற்கான கட்டணமும் தள்ளுபடி செய்யப்பட்டது.
அவர் மீதான குற்றச்சாட்டுகளும், கைது விவரங்களும் நீக்கப்பட்டன.

தம்மைப்போல தவறுதலாகச் சிறையில் அடைக்கப்பட்டவர்களை விடுவிப்பதற்காக லாப நோக்கமற்ற அறநிறுவனத்தை நடத்தி வருகிறார் மெக்கிண்டாயர்.

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்