Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

கொலம்பியா: 276 சிறாரைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய ஆடவர் கைது

கொலம்பியாவில் கிட்டத்தட்ட 300 சிறாரைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய ஆடவருக்கு 60 ஆண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
கொலம்பியா: 276 சிறாரைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய ஆடவர் கைது

(படம்: சேனல் நியூஸ்ஏஷியா)


கொலம்பியாவில் கிட்டத்தட்ட 300 சிறாரைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய ஆடவருக்கு 60 ஆண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

30 வயதுக்கு மேற்பட்ட வான் கார்லோஸ் சென்சஸ் லட்டோர் (Juan Carlos Sánchez Latorre) 2007க்கும் 2008க்கும் இடைப்பட்ட காலத்தில் அக்குற்றங்களைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

சிறாரைத் துன்புறுத்தும் படங்கள், காணொளிகளை 'Big Bad Wolf' என்ற புனைபெயரில் இணையத்தில் பகிர்ந்திருக்கிறார் சென்சஸ் லட்டோர்.

5 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த அவர், கடந்த ஆண்டு வெனிசுவேலாவில் பிடிபட்டார்.

பெண் பிள்ளகளும் ஆண் பிள்ளைகளுமாக 276 பேரைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதை சென்சஸ் லட்டோர் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.

அந்தப் பிள்ளைகளை இணையம்வழி தொடர்புகொண்டிருக்கிறார் அவர்.

பின்னர் அவர்களை, கடைத் தொகுதி போன்ற இடங்களில் நேரடியாகச் சந்தித்து பணம் கொடுத்தோ பலவந்தமாகவோ பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டிருக்கிறார் சென்சஸ் லட்டோர்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்