இருவரைச் சுட்டுக் கொன்று தம்மையும் மாய்த்துக்கொண்ட துப்பாக்கிக்காரர்
அமெரிக்காவின் ஹியூஸ்டன் நகரில் துப்பாக்கிக்காரர் இருவரைச் சுட்டுக் கொன்றதுடன் தம்மையும் மாய்த்துக்கொண்டார்.
அமெரிக்காவின் ஹியூஸ்டன் நகரில் துப்பாக்கிக்காரர் இருவரைச் சுட்டுக் கொன்றதுடன் தம்மையும் மாய்த்துக்கொண்டார்.
வாகனங்களைப் பழுதுபார்க்கும் கடை ஒன்றின் முன்னாள் ஊழியரான அவர், தற்போது அங்கு வேலை பார்க்கும் இருவரை நேற்று சுட்டுக் கொன்றார்.
பின் அந்தக் கடைக்கு அருகிலேயே தன்னையும் சுட்டுக்கொண்டதாய் ஹியூஸ்டன் காவல்துறை கூறியது.
ஒரு சில நிமிடங்களும் அனைத்தும் நடந்தேறியதாக அதிகாரிகள் கூறினர்.
மாண்டோரின் அடையாளங்கள் வெளியிடப்படவில்லை.