அமெரிக்கா: நியூயார்க்கில் 5 பேருக்கு Omicron வகைக் கிருமித்தொற்று
அமெரிக்காவின் நியூயார்க் மாநிலத்தில் 5 பேருக்கு ஒமக்ரான் கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க் மாநிலத்தில் 5 பேருக்கு ஒமக்ரான் கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது.
அந்நாட்டில் இதுவரை 8 பேருக்கு ஒமக்ரான் கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
நியூயார்க்கில் அடையாளம் காணப்பட்ட ஒமக்ரான் கிருமித்தொற்று ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டதாக மாநிலத்தின் ஆளுநர் கேத்தி ஹோச்சுல் (Kathy Hochul) குறிப்பிட்டார்.
எனவே அத்தகைய கிருமித்தொற்றால் மக்கள் பதற்றமடையவேண்டாம் என்று அவர் அறுவுறுத்தினார்.
தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள், Booster எனும் கூடுதல் தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள், முகக்கவசத்தை அணியுங்கள்
என்றும் அவர் வலியுறுத்தினார்.