கிரைஸ்ட்சர்ச் தாக்குதல் நடத்திய சந்தேக நபர் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொள்ளவில்லை
நியூஸிலந்தின் 2 பள்ளிவாசல்களில் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல் நடத்திய சம்பவத்தின் தொடர்பில் சந்தேக நபர் தன்மீது சுமத்தப்பட்ட அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ளார்.
(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)
நியூஸிலந்தின் 2 பள்ளிவாசல்களில் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல் நடத்திய சம்பவத்தின் தொடர்பில் சந்தேக நபர் தன்மீது சுமத்தப்பட்ட அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ளார்.
அவர் மொத்தம் 92 குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகிறார்.
29 வயது ஆஸ்திரேலியர் பிரென்ட்டன் டரான்ட் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 51 பேர் மாண்டனர்.
மார்ச் 15ஆம் தேதி நடந்த துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலை அவர் Facebookஇல் நேரடியாக வெளியிட்டார்.
அடுத்த ஆண்டு மே 4ஆம் தேதி அவர் மீதான விசாரணை மீண்டும் தொடங்கும்.