Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

ஆப்கானிஸ்தான் பள்ளிவாசலில் துப்பாக்கிச் சூடு, ஒரே குடும்பத்தைச் சேர்ந்தோர் கொலை

ஆப்கானிஸ்தானின் கிழக்கு வட்டாரத்தில் உள்ள ஒரு பள்ளிவாசலில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த எட்டுப் பேர் கொல்லப்பட்டனர். 

வாசிப்புநேரம் -
ஆப்கானிஸ்தான் பள்ளிவாசலில் துப்பாக்கிச் சூடு, ஒரே குடும்பத்தைச் சேர்ந்தோர் கொலை

(கோப்புப்படம்: Reuters)

ஆப்கானிஸ்தானின் கிழக்கு வட்டாரத்தில் உள்ள ஒரு பள்ளிவாசலில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த எட்டுப் பேர் கொல்லப்பட்டனர்.

நேற்றிரவு மாநிலத்தில் உள்ள ஜலலாபாத் நகரில் நிலத் தகராற்றின் காரணமாய் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் மேற்கொள்ளப்பட்டதாக அம்மாநில ஆளுநர் தெரிவித்தார்.

ஐந்து சகோதரர்களும் அவர்களின் மூன்று ஆண் உறவினர்களும் கொல்லப்பட்டனர்.

துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தை நான்கரார் காவல்துறை பேச்சாளர் உறுதிப்படுத்தினார்.

சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்