வட கொரியா அதன் அணுவாயுதத் திட்டத்தைக் கைவிட அதிக நெருக்குதல் அளிக்குமாறு அமெரிக்கா கேட்டுக்கொண்டுள்ளது
வட கொரியா அதன் அணுவாயுதத் திட்டத்தைக் கைவிட அதிக நெருக்குதல் அளிக்குமாறு அமெரிக்கா அதன் தோழமை நாடுகளைக் கேட்டுக்கொண்டுள்ளது.
வட கொரியா அதன் அணுவாயுதத் திட்டத்தைக் கைவிட அதிக நெருக்குதல் அளிக்குமாறு அமெரிக்கா அதன் தோழமை நாடுகளைக் கேட்டுக்கொண்டுள்ளது.
20 நாடுகள் கலந்துகொள்ளும் வென்கூவர் (Vancouver) பேச்சின் போது அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ரெக்ஸ் டிலர்சன் (Rex Tillerson), ஜப்பானிய வெளியுறவு அமைச்சரும்
அந்த வேண்டுகோளை விடுத்தனர்.
கடல் மார்க்கத்தில் வட கொரிய கப்பல்களை இடைமறிக்குமாறும் , பியோங்யாங் ஒவ்வொரு முறையும் புதிய ஆயுதச்சோதைனைகளை நடத்தும்போது அதற்கு எதிராய் புதிய அனைத்துலக நடவடிக்கைகள் எடுக்குமாறும் அவர்கள் கேட்டுக்கொண்டனர்.
ஆனால் மீண்டும் தொடங்கப்பட்டிருக்கும் இரு கொரியாக்களின் பேச்சு வார்த்தை, வட கொரியாவுக்கு எதிராய் விதிக்கப்பட்டுள்ள தடைகள் பலனளிக்கத் தொடங்கியிருப்பதாகத் தென் கொரியா விவாதித்தது.
வென்கூவர் (Vancouver) பேச்சு வார்த்தையில் சீனாவும் ரஷ்யாவும் கலந்துகொள்ளவில்லை.