Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

Al-Qaeda பயங்கரவாத அமைப்பு குறித்து எச்சரிக்கை விடுக்கும் அமெரிக்க வேவுத் துறை

Al-Qaeda பயங்கரவாத அமைப்பு குறித்து அமெரிக்க வேவுத் துறை கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது.

வாசிப்புநேரம் -
Al-Qaeda பயங்கரவாத அமைப்பு குறித்து எச்சரிக்கை விடுக்கும் அமெரிக்க வேவுத் துறை

(படம்: AP Photo)

Al-Qaeda பயங்கரவாத அமைப்பு குறித்து அமெரிக்க வேவுத் துறை கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது.

செப்டம்பர் 11 தாக்குதல்களை நடத்திய அந்தப் பயங்கரவாத அமைப்பு, ஆப்கானிஸ்தானில் அடுத்த ஓரிரு ஆண்டுகளில் மீண்டும் வலுப்பெற்றுச் செயல்படலாம் என அது கூறியது.

அது பிறகு அமெரிக்காவுக்கு மிரட்டலாகவும் அமையலாம் என வேவுத் துறை வட்டாரங்கள் குறிப்பிட்டன.

தேசிய பாதுகாப்பு உச்சநிலைக் கூட்டத்தில், அதிகாரிகள் அது பற்றி பேசியதாக New York Times தகவல் அளித்தது.

தலிபான் அமைப்பு ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றிய பிறகு, Al-Qaeda அமைப்பின் உறுப்பினர்கள் அங்கு திரும்பத் தொடங்கியிருப்பதாக நம்பப்படுகிறது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்