Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

அமெரிக்கா: பிள்ளைகள் சம்பந்தப்பட்ட பாலியல் வழக்கு - குற்றச்சாட்டை மறுத்த சிங்கப்பூரர் ஏமஸ் யீ

அமெரிக்கா: பிள்ளைகள் சம்பந்தப்பட்ட பாலியல் வழக்கு - குற்றச்சாட்டை மறுத்த சிங்கப்பூரர் ஏமஸ் யீ

வாசிப்புநேரம் -

அமெரிக்காவில் தஞ்சம் புகுந்துள்ள சிங்கப்பூரர் ஏமஸ் யீ (Amos Yee) சிறுவர்களிடம் ஆபாசப்படங்களைக் காட்டியது தொடர்பில் சுமத்தப்பட்ட அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ளார்.

நேற்று சிக்காகோ நீதிமன்றத்தில் நடந்த வழக்கு விசாரணையின் போது ஏமஸ் அவ்வாறு குற்றச்சாட்டுகளை நிராகரித்ததாக நீதிமன்ற அதிகாரிகள் கூறினர்.

தற்போது அவர் சிக்காகோவின் குக் மாவட்டச் (Cook County) சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

வழக்கு விசாரணை அடுத்த மாதம் 18-ஆம் தேதி மீண்டும் நீதிமன்றத்தில் இடம்பெறும்.

ஏமஸ் 14 வயதுச் சிறுமியுடன் ஆபாசப் படங்களையும், தகவல்களையும் பரிமாறிக்கொண்டதன் தொடர்பில் சென்ற மாதம் சிக்காகோவில் கைதுசெய்யப்பட்டார்.

முன்னதாக, கிறிஸ்துவர்கள், முஸ்லிம்கள் ஆகியோருக்கு எதிராக வெறுப்புணர்வைத் தூண்டும் கருத்துகளை வெளியிட்டதற்காக 2015, 2016-ஆம் ஆண்டுகளில் ஏமஸுக்கு சிங்கப்பூரில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அவர் அமெரிக்காவிடம் அடைக்கலம் நாடினார்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஏமஸின் அடைக்கலம் ரத்து செய்யப்பட்டு அமெரிக்காவிலிருந்து வெளியேற்றப்படலாம்.

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்