Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

பிள்ளைகள் சம்பந்தப்பட்ட பாலியல் காட்சிகளை வைத்திருந்த சந்தேகத்தில் ஏமஸ் யீ மீது குற்றச்சாட்டு

அமெரிக்காவில் தஞ்சம் புகுந்துள்ள சிங்கப்பூரர் ஏமஸ் யீ (Amos Yee) மீது, பிள்ளைகள் சம்பந்தப்பட்ட பாலியல் காட்சிகளைப் பெற்றுக்கொண்ட, வைத்திருந்த சந்தேகத்தின் பேரில் குற்றஞ்சாட்டப்பட்டிருப்பதாகத் தகவல் வெளிவந்துள்ளது.

வாசிப்புநேரம் -

அமெரிக்காவில் தஞ்சம் புகுந்துள்ள சிங்கப்பூரர் ஏமஸ் யீ (Amos Yee) மீது, பிள்ளைகள் சம்பந்தப்பட்ட பாலியல் காட்சிகளைப் பெற்றுக்கொண்ட, வைத்திருந்த சந்தேகத்தின் பேரில் குற்றஞ்சாட்டப்பட்டிருப்பதாகத் தகவல் வெளிவந்துள்ளது.

Chicago Sun-Times நாளேடு அது குறித்த செய்தியை வெளியிட்டது.

கிறிஸ்துவர்கள், முஸ்லிம்கள் ஆகியோருக்கு எதிராக வெறுப்புணர்வைத் தூண்டும் கருத்துகளை வெளியிட்டதற்காக 2015, 2016-ஆம் ஆண்டுகளில் ஏமஸுக்கு சிங்கப்பூரில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.

அதனைத் தொடர்ந்து 20 வயது ஏமஸ் அமெரிக்காவில் அடைக்கலம் நாடினார்.

சிக்காகோ நகரில் (Chicago) வசித்தபோது, 14 வயது அமெரிக்கச் சிறுமியுடன் ஏமஸ், ஆபாசப் படங்களைப் பகிர்ந்துகொண்டதாகச் சந்தேகிக்கப்படுகிறது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், அடைக்கலம் பெற்றுவரும் தகுதியை அவர் இழக்க நேரிடலாம்.

ஒரு மில்லியன் டாலர் பிணையில் அவரை வெளியில் விடுவதற்கு நீதிபதி உத்தரவிட்டார்.

விசாரணைக்குக் காத்திருக்கும் வேளையில் ஏமஸ் இணையத்தைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்