பச்சை நிறத்துக்கு மாறும் அண்டார்டிகா பனிப் பிரதேசம்
அண்டார்டிகா பனிப் பிரதேசத்தின் சில பகுதிகள், அண்மைக் காலமாக சற்று பச்சை நிறமாகக் காட்சியளிக்கின்றன.
அண்டார்டிகா பனிப் பிரதேசத்தின் சில பகுதிகள், அண்மைக் காலமாக சற்று பச்சை நிறமாகக் காட்சியளிக்கின்றன.
உலக வெப்ப உயர்வு காரணமாகத் தரையிலுள்ள பனிப்பரப்பு மீதும் பனிமலைகள் மீதும் நீர்ப்பாசி உருவாகத் தொடங்கியுள்ளது.
வெகுவாகப் பரவும் நீர்ப்பாசியை விண்வெளியிலிருந்தும் காணமுடிவதை ஆய்வுகள் காட்டின.
அண்டார்டிகாவில் நீர்ப்பாசி தென்படுவது இது புதிதல்ல. பலகாலத்துக்கு முன்பே அதுபற்றிப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆனால், இந்த அளவுக்கு அது பரவியிருப்பது இதுவே முதல்முறை.
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆய்வாளர்களும், பிரிட்டனைச் சேர்ந்த அண்டார்டிகா ஆய்வாளர்களும் அதனைத் தெரிவித்தனர்.
பனிப் பிரதேசத்தின் சுமார் 1,700 இடங்களில், தனித் தனித் திட்டுகளாக நீர்ப்பாசி பரவியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சுற்றுப்புறத்திலிருந்து கரியமில வாயுவை உறிஞ்சிக்கொள்ளும் அன்டார்டிகாவின் ஆற்றலை அது காட்டுவதாக ஆய்வாளர்கள் கூறினர்.
875-ஆயிரம் கார்ப் பயணங்களின்போது வெளியேறும் கரியமில வாயுவுக்கு இணையான கரியமில வாயுவை உறிஞ்சி அந்தப் பாசிப் பரப்பு உருவாகியுள்ளது.
அது கணிசமான அளவு போலத் தோன்றினாலும்,
உலகளாவிய கரியமில வாயு வெளியேற்றத்தில் அது மிகச் சிறிய பகுதியே.
பச்சை நீர்ப்பாசியைத் தவிர சிவப்பு, ஆரஞ்சு வண்ண நீர்ப்பாசி வகைகளையும் ஆய்வு செய்ய, ஆய்வாளர்கள் திட்டமிடுகின்றனர்.
ஆனால் அந்த வகைப் பாசியை, விண்வெளியில் இருந்து கண்டுபிடிப்பது சிரமம்