ஆஸ்திரேலியாவில் கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்த COVID ஒருங்கிணைப்புக் குழு
ஆஸ்திரேலியாவில் கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்த COVID ஒருங்கிணைப்புக் குழு
ஆஸ்திரேலியாவில் கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளை மேம்படுத்தும் வகையில், COVID ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்படும் என்று பிரதமர் ஸ்காட் மொரிசன் அறிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியர்கள் வெளிநாடு செல்வதற்குத் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனைகளில், அவசர கவனிப்புத் தேவைப்படுவோரைத் தவிர மற்ற அனைவருக்கும் அறுவை சிகிச்சைகள் ஒத்திவைக்கப்படும்.
ஆஸ்திரேலியாவில் இதுவரை 2,200க்கும் அதிகமானோர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். எட்டுப் பேர் உயிரிழந்தனர்.