ஆஸ்திரேலியா: நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் COVID-19 கட்டுப்பாடுகள் மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு
ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் COVID-19 கட்டுப்பாடுகள் மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளன.
ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் COVID-19 கட்டுப்பாடுகள் மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளன.
சிட்னி நகரில் வசிக்கும் ஒரு தம்பதிக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டிருப்பது இந்த வாரம் உறுதியானது.
அவர்களுக்கு எப்படிக் கிருமி பரவியது என்பதைக் கண்டுபிடிக்க கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டுள்ளன.
3 நாள்களாக சமூகத்தில் யாரும் பாதிக்கப்படவில்லை என்றபோதும் பெரிய அளவில் கிருமி பரவுவதைத் தடுக்க அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாய் மாநில முதலமைச்சர் சொன்னார்.
சிட்னி நகரிலும் அதைச் சுற்றியுள்ள பகுதியிலும் 5 மில்லியனுக்கும் அதிகமானோர் வசிக்கின்றனர்.
தற்போது நடப்பில் உள்ள விதிமுறைகளின்கீழ், அவர்கள் பொதுப் போக்குவரத்திலும் பெரும்பாலான பொது இடங்களிலும் முகக்கவசங்களை அணியவேண்டும்.
ஒரு வீட்டில் ஒரு நேரத்தில் 20 பேர் வரை மட்டும் இருக்கலாம்.
இந்தக் கட்டுப்பாடுகள் வரும் 17ஆம் தேதி வரை நடப்பில் இருக்கும்.