வீட்டு வாடகை கொடுக்கத் தவறிய ஆடவரைக் கொன்றவருக்கு 11 ஆண்டுச் சிறை
ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் Airbnb சேவை மூலம் பெற்ற அறைக்கு வாடகை கொடுக்கத் தவறிய ஆடவரைக் கொன்றவருக்கு 11 ஆண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் Airbnb சேவை மூலம் பெற்ற அறைக்கு வாடகை கொடுக்கத் தவறிய ஆடவரைக் கொன்றவருக்கு 11 ஆண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அந்தத் தகவலை ஆஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவித்தன.
ஜேசன் என்னும் ஆடவர் தமக்குக் கிட்டத்தட்ட 200 வெள்ளி வாடகை கொடுக்கத் தவறிய ரமிஸ் என்பரை அடித்துக் கொலை செய்துள்ளார்.
ரமிஸ் கடந்த 2017ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஜேசன் வீட்டில் தங்கியுள்ளார்.
ஜேசனுக்கு உடந்தையாக இருந்த மற்ற இரண்டு நபர்களுக்கும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
தான் கொலை செய்தது சரியே என்று ஜேசன் காவல்துறையிடம் கூறியதாகவும் ஊடகங்கள் தெரிவித்தன.