இஸ்ரேலியப் பெண்ணைப் பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற குற்றத்தை ஒப்புக்கொண்ட ஆஸ்திரேலியர்
இஸ்ரேலியப் பெண்ணைப் பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற குற்றத்தை 20 வயது ஆஸ்திரேலிய ஆடவர் ஒருவர் ஒப்புக்கொண்டார்.
இஸ்ரேலியப் பெண்ணைப் பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற குற்றத்தை 20 வயது ஆஸ்திரேலிய ஆடவர் ஒருவர் ஒப்புக்கொண்டார் .
ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் கடந்த ஜனவரி மாதம் ஆய்யா மாசர்வே (Aiia Maasarwe) எனும் 21 வயது இஸ்ரேலிய மாணவி சாலையோரத்தில் நடந்துகொண்டிருந்தபோது தாக்கப்பட்டார்.
அதன் பின்னர் அவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து 20 வயது ஆஸ்திரேலியர் கோடி ஹெர்மன் (Codey Herrmann) கைது செய்யப்பட்டு குற்றஞ்சாட்டப்பட்டார்.
ஹெர்மன் மீது 2 குற்றங்கள் சுமத்தப்பட்டன, அந்தக் குற்றங்களை அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
ஆய்யாவின் கொலைச் சம்பவத்தைத் தொடர்ந்து பெண்களுக்குப் பாதுகாப்புக் கோரி ஆஸ்திரேலியாவின் சில முக்கிய நகரங்களில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு பேரணி நடத்தினர்.