புதிய குடியேறிகளின் வருகையைக் குறைக்கவிருக்கும் ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலியா, ஆண்டு அடிப்படையில், புதிய குடியேறிகளின் வருகையைக் கிட்டத்தட்ட 15 விழுக்காடு குறைக்கவிருப்பதாக தெரிவித்திருக்கிறது.
(வாசிப்பு நேரம்: 1 நிமிடங்களுக்குள்)
ஆஸ்திரேலியா, ஆண்டு அடிப்படையில், புதிய குடியேறிகளின் வருகையைக் கிட்டத்தட்ட 15 விழுக்காடு குறைக்கவிருப்பதாக தெரிவித்திருக்கிறது.
நகர்ப்புற நெரிசலை குறைக்க அந்தப் புதிய ஏற்பாடு.
190-ஆயிரத்திலிருந்து 160,000க்கு அந்த எண்ணிக்கை குறைக்கப்படும்.
புதிதாக வருவோரில் சிலர், 3 ஆண்டுகளுக்கு முக்கிய நகரங்களுக்கு வெளியே உள்ள வட்டாரங்களில் வசிக்க வேண்டியிருக்கும்.
அதாவது மெல்பர்ன், பெர்த், சிட்னி, கோல்ட் கோஸ்ட் போன்ற நகரங்களில் அவர்கள் வசிக்க முடியாது.
தற்காலிகக் குடிபெயர்வுக்கு எவ்விதக் கட்டுப்பாடும் இல்லை.
தற்காலிக விசா பெற்ற மாணவர்களுக்கும் அது பொருந்தும்.