ஆஸ்திரேலியா: புதிய கிருமிப்பரவலைக் கட்டுப்படுத்த முயலும் குவீன்ஸ்லந்து
ஆஸ்திரேலியா: புதிய கிருமிப்பரவலைக் கட்டுப்படுத்த முயலும் குவீன்ஸ்லந்து
ஆஸ்திரேலியாவின் குவீன்ஸ்லந்து மாநிலம், புதிய கிருமிப்பரவலைக் கட்டுப்படுத்த முயன்றுவருகிறது.
உள்ளூரில் ஒருவருக்குக் கிருமித்தொற்று அடையாளம் காணப்பட்டிருப்பதை மாநில முதலமைச்சர் உறுதிப்படுத்தினார்.
பாதிக்கப்பட்டவர் பெரிதாகிவரும் ஒரு குழுமத்துடன் தொடர்புடையவர் என்று முதலமைச்சர் சொன்னார்.
அவர் கடந்த வியாழக்கிழமை கிருமித்தொற்று கண்டறியப்பட்ட 26 வயது ஆடவரின் சகோதரர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இவ்விருவரின் நெருங்கிய நண்பர் ஒருவருக்கு நேற்று கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது.
சுமார் 25 பேர் கலந்துகொண்ட ஒன்றுகூடலில் அவர்கள் சம்மந்தப்பட்டிருக்கலாம் என்று முதற்கட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
பின்னர், அந்த ஒன்றுகூடலில் 5 பேர் மட்டுமே கலந்துகொண்டதாக பிரிஸ்பேன் காவல்துறை தெளிவுபடுத்தியிருந்தது.