COVID-19: ஆஸ்திரேலியாவில் ஒரே நாளில் புதிதாக 747 பேருக்கு நோய்த்தொற்று; 13 பேர் மரணம்
COVID-19: ஆஸ்திரேலியாவில் ஒரே நாளில் புதிதாக 747 பேருக்கு நோய்த்தொற்று; 13 பேர் மரணம்
ஆஸ்திரேலியாவில் ஒரே நாளில் புதிதாக 747 பேருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது.
விக்டோரியா மாநிலத்தில் மட்டும் 720க்கும் அதிகமானோருக்குக் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
13 பேர் மாண்டனர்.
அவர்கள் 70 லிருந்து 90 வயதுக்கு இடைப்பட்டவர்கள்.
விக்டோரியா மாநிலத்தில் முன்னெப்போதும் இல்லாதவகையில் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று நள்ளிரவிலிருந்து வீட்டைவிட்டு வெளியே செல்லும் அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டியது கட்டாயம் என்று விக்டோரியா மாநில முதலமைச்சர்
டேனியல் ஆண்ட்ரூஸ் (Daniel Andrews) உத்தரவிட்டுள்ளார்.
நிலைமை கட்டுக்குள் இருப்பதாக நேற்று நம்பிக்கை உருவானது.
புதிதாக பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை விரைவில் குறையும் என்று அதிகாரிகள் நம்புகின்றனர்.