பெண்ணின் வயிற்றைக் கிழித்து சிசுவை எடுத்த மூவர்மீது குற்றச்சாட்டு
பதின்ம வயதுப் பெண்ணின் வயிற்றைக் கழித்து சிசுவை எடுத்த மூவர்மீது நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)
சிக்காகோ: பதின்ம வயதுப் பெண்ணின் வயிற்றைக் கிழித்து சிசுவை எடுத்த மூவர்மீது நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
பிறக்கப்போகும் குழந்தைக்கான அத்தியாவசியப் பொருள்களை வாங்க ஒருவரின் வீட்டிற்குச் சென்றார் 19 வயது மார்லன் ஓச்சோ-லோபேஸ் (Marlen Ochoa-Lopez).
அப்போது 46 வயது மாது கிளரிஸா ஃபிகரோவாவும் ( Clarisa Figueroa) அவர மகள் 24 வயது மகள் டெசிரியும் பதின்ம வயதுப் பெண்ணைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்து சிசுவை வெளியே எடுத்ததாக நம்பப்படுகிறது.
சம்பவத்தை மறைத்ததாக, ஃபிகரோவாவின் காதலர் மீதும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
புதிய குழந்தையின் வரவைக் கொண்டாட வேண்டிய குடும்பம் இளம் பெண்ணையும் அவரது சிசுவையும் இழந்து தவிக்கிறது என்றார் காவல்துறைத் தலைவர்.
பெண்ணின் சடலம் ஃபிகரோவாவின் வீட்டுக் குப்பைத் தொட்டியில் கண்டுபிடிக்கப்பட்டது.
சிசு தற்போது மருத்துவமனையின் தீவிரச் சிகிச்சைப் பிரிவில் இருக்கிறது.
குழந்தைக்குத் தேவையான பொருள்களை இலவசமாய்த் தருவதாகக் கூறி, ஃபிகரோவா, அந்தப் பெண்ணை வீட்டுக்கு அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.
ஏற்கனவே அவர் சில பொருள்களை அந்தப் பெண்ணுக்குக் கொடுத்திருந்ததால் சந்தேகம் ஏற்படவில்லை.
பெண்ணுக்கும் ஃபிகரோவாவுக்கும் இடையே Facebookஇல் பரிமாறிக் கொள்ளப்பட்ட தகவல்களின் அடிப்படையில், காவல்துறையினர் துப்புத் துலக்கினர்.