அமெரிக்கா: கொலையுண்ட தாயின் கருப்பையை வெட்டி எடுக்கப்பட்ட குழந்தை மாண்டது
அமெரிக்காவில் கொலை செய்யப்பட்ட தாயாரின் கருப்பையை வெட்டி எடுக்கப்பட்ட குழந்தை, 2 மாதம் கழித்து மருத்துவமனையில் மாண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் கொலை செய்யப்பட்ட தாயாரின் கருப்பையை வெட்டி எடுக்கப்பட்ட குழந்தை, 2 மாதம் கழித்து மருத்துவமனையில் மாண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிக்காகோ (Chicago) மருத்துவமனையில் இரு மாதங்களாக உயிருக்குப் போராடிவந்த குழந்தை, மூளையில் ஏற்பட்ட கடுமையான காயங்களால் மாண்டது.
19 வயது மார்லன் ஒச்சோவா-லோப்பெஸ்ஸை (Marlen Ochoa-Lopez) ஏப்ரல் 23 அன்று சிக்காகோவில் வசிக்கும் மாதும் அவருடைய மகளும் குழந்தைகளுக்கான பொருள்களை இலவசமாய்க் கொடுப்பதாகக் கூறி ஏமாற்றி வரவழைத்தனர்.
அப்பொழுது 9 மாதம் கர்ப்பமாக இருந்த ஒச்சோவா-லோப்பெஸ்ஸை இருவரும் சேர்ந்து கழுத்தை நெரித்துக் கொன்றனர்.
பின் மாண்ட கர்ப்பிணியின் கருப்பையை வெட்டி, குழந்தையை எடுத்தனர்.
குழந்தை மூச்சுவிடவில்லை என்று உணர்ந்ததும் அது தன்னுடைய குழந்தை எனப் பொய் சொல்லி, மாது மருத்துவமனையில் சேர்த்தார்.
மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்களால் அறிவிக்கப்பட்ட குழந்தை உயிர்காப்பு இயந்திரத்தின் உதவியால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தது.
மூன்று வாரங்களுக்குப் பின் ஒச்சோவா-லோப்பெஸ்ஸின் சடலம் அவரைக் கொன்றவர்களின் வீட்டுக் குப்பைத் தொட்டியில் கண்டுபிடிக்கப்பட்டது.
ஒச்சோவா-லோப்பெஸ்ஸைக் கொன்றதாகவும் குழந்தையை ஆயுதத்தால் தாக்கியதாகவும் இரண்டு பெண்கள் மீதும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
கொலையை மறைத்ததாக மாதின் காதலர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.