Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

ஜெர்மனியில் பிறந்த பனிக்கரடிக் குட்டி பொதுமக்களுக்கு அறிமுகம்

ஜெர்மானிய விலங்குத் தோட்டம் ஒன்றில் பிறந்த பனிக்கரடிக் குட்டி, முதல்முறையாக வெளியே காலடி எடுத்து வைத்துப் பார்ப்போரைப் பரவசப்படுத்தியுள்ளது.

வாசிப்புநேரம் -

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)


ஜெர்மானிய விலங்குத் தோட்டம் ஒன்றில் பிறந்த பனிக்கரடிக் குட்டி, முதல்முறையாக வெளியே காலடி எடுத்து வைத்துப் பார்ப்போரைப் பரவசப்படுத்தியுள்ளது.

குட்டி, அது தங்கியிருக்கும் கூண்டுக்கு வெளியே முதல்முறையாக நடக்க முயன்றது. ஆனால், அது தடுமாறி நடந்த விதம் அங்கிருந்தோரை எளிதில் கவர்ந்தது.

டிசம்பர் முதல் தேதி, ஜெர்மன் தலைநகர் பெர்லினில் உள்ள டியர்பார்க் (Tierpark) விலங்குத் தோட்டத்தில் பிறந்த அந்தக் குட்டிக்கு, இன்னும் பெயரிடப்படவில்லை.

அது டொன்யா (Tonja) என்ற 9 வயதுப் பெண் கரடிக்கும் வொலொட்யா (Wolodja) என்ற ஆண் கரடிக்கும் பிறந்தது.

வழக்கமாகக் குட்டிகள் பிறக்கும்போது, அவை இரண்டரை மாதங்களுக்குப் பார்வைத்திறனும் செவிப்புலனும் இல்லாமல் இருக்கும்.

அந்த நேரத்தில் குட்டியை அதன் தாயான டொன்யா பராமரித்து வந்தது.

திங்கட்கிழமை முதல், குட்டியைக் காண பொதுமக்கள் விலங்குத் தோட்டத்திற்குப் படையெடுப்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தாயின் வளர்ப்பில் ஈராண்டுகள் கழித்தப் பின்னர் வேறொரு விலங்குத் தோட்டத்திற்குக் குட்டி அனுப்பப்படும்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்