COVID-19 நோயிலிருந்து மக்களைப் பாதுகாக்க அனைத்துலகச் சமூகம் தவறிவிட்டது: பில் கேட்ஸ்
அனைத்துலகச் சமூகம் COVID-19 நோயிலிருந்து மக்களைப் பாதுகாக்கத் தவறிவிட்டதாய்ச் செல்வந்தர் பில் கேட்ஸ் (Bill Gates) G7 மாநாட்டில் கூறியுள்ளார்.
அனைத்துலகச் சமூகம் COVID-19 நோயிலிருந்து மக்களைப் பாதுகாக்கத் தவறிவிட்டதாய்ச் செல்வந்தர் பில் கேட்ஸ் (Bill Gates) G7 மாநாட்டில் கூறியுள்ளார்.
Bill and Melinda Gates அறநிறுவனத்தை நிர்வகிக்கும் அவர், கிருமிப்பரவல் சூழலில் சரியான நிபுணர்கள் அணுகப்படவில்லை என்றும் முறையான வளங்கள் பயன்படுத்தப்படவில்லை என்றும் சாடினார்.
கிருமிப்பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை நாடுகள் முன்கூட்டியே மேற்கொண்டிருந்தால் அதன் தாக்கத்தைக் குறைத்திருக்கலாம் என்றார் அவர்.
தடுப்பூசிகள் சமநிலையற்ற முறையில் விநியோகிக்கப்படுவது குறித்தும் திரு. பில் கேட்ஸ் கருத்துரைத்தார்.
தடுப்பூசித் திட்டங்களுக்குக் கூடுதல் நிதி ஆதரவு வழங்கப்படவேண்டும் என்றும் தடுப்பூசி தயாரிப்பு துரிதப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.